உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்  

சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல், இடை இடையே தண்ணீர் அருந்தாமல், அப்படியே விழுங்காமல் மெல்ல மென்று பொறுமையாக சாப்பிட்டால் வாழ்க்கையின் ஆயுளை நீட்டிக்கலாம் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். அந்த வகையில் நாம் உணவு சாப்பிடும் பொழுது செய்யக்கூடாத தவறுகள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும் சமையல் என்பது ஒரு கலை என்பார்கள். சமைப்பது மட்டும் அல்ல சமைத்ததை பரிமாறுவதும் ஒரு கலை தான். அன்பாகவும், அக்கறையாகவும் பரிமாறும் போது சாப்பிடுபவர்களின் வயிறு மட்டும் அல்ல மனதும் சேர்ந்து நிறைகிறது.

சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அந்த உணவைப் பரிமாறுபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். உணவு பரிமாறுபவர்கள் முதலில் சாதத்தை சிறிதளவும் சிந்தாமல் பரிமாற வேண்டும். சாதம் கீழே சிந்தினால் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடும் என்கிறது சாஸ்திரங்கள்.

உண்ணும் உணவு தெய்வத்திற்கு நிகரானது. அதனால் தான் சாதத்தை நாம் அன்னபூரணி என்கிறோம். எனவே தெரியாமல் கூட அன்னத்தைக் கீழே சிந்தக்கூடாது. அன்னத்தை கீழே சிந்தினால் தோஷம் ஏற்படும், இதனால் வறுமை தாண்டவம் ஆட ஆரம்பிக்கும். மற்றவர்களிடன் கையேந்தும் நிலை ஏற்படும் என்பதால் தான் உணவு விஷயத்தில் நிறையவே கவனம் செலுத்த வேண்டும். அன்னத்தை மட்டுமல்லாமல் சாப்பாடு பரிமாறும் பொழுது உப்பு, தயிர், ஊறுகாய் போன்றவற்றையும் கீழே தெரியாமல் கூட சிந்த விடக் கூடாது.

உணவை வீணாக்கக் கூடாது உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. தயிர் கோமாதா கொடுக்கும் ஒரு அற்புதமான அமிர்தமாகும்.  குபேரனுக்கு உகந்த ஊறுகாயை கீழே கொட்டினால் பணக் கஷ்டம் வரும். இப்படியான பொருட்களை கீழே சிந்தாமல்   பக்குவமாக பரிமாறப்பட வேண்டும். பரிமாறுபவர் மட்டுமல்ல, அதை சாப்பிடுபவர்களும் தட்டில் வைத்து ஒழுங்காக சாப்பிட வேண்டும். தட்டை சுற்றி இவற்றை சிந்துவது என்பது கூடாது. சிலருடைய தட்டை சுற்றி பார்த்தால் சாத பருக்கைகளும், மற்ற சில உணவுப் பொருட்களும் சிந்திக் கிடக்கும். இது போல சிந்திக் கொண்டே சாப்பிடுபவர்களுக்கு கையில் நிச்சயம் பணம் என்பது தங்கவே செய்யாது.

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது வந்த வழியே ஓடிக் கொண்டே இருக்கும். எனவே சிந்தாமல், சிதறாமல் சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையிலும் பணமானது சிந்தாமல், சிதறாமல் வந்து கொண்டே இருக்கும் என்கிறது ஆன்மீகம்.

அரிசி, உப்பு, ஊறுகாய், தயிர் மட்டுமல்லாமல் பொதுவாகவே எந்த ஒரு உணவுப் பொருட்களையும் கீழே சிந்தக் கூடாது. குறிப்பாக தண்ணீரை அருந்தும் பொழுது கீழே சிந்திக் கொண்டே குடிக்கக் கூடாது. தண்ணீர் கீழே சிந்தினால் கடன் பிரச்சனை ஏற்படும். சாப்பிடும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் இதற்காகத் தான். நிதானமாக சாப்பிட்டு, முழு ஈடுப்பாட்டுடன் சாப்பிட்டு பாருங்கள், அதன் பிறகு உங்களுக்கு தோல்வியே வராது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

யோகங்கள் 27

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #5

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு...
தேங்காயில் குடுமி ஏன் வைக்க வேண்டும்

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா?

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை...
கனவுகளின் அர்த்தங்கள்

உங்களை பற்றிய கனவு பலன்கள்

உங்களை பற்றிய கனவு பலன்கள் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. மனிதர்கள் முதல் விலங்குகள் வரை எல்லோருக்கும் கனவுகள் வருகின்றன. சில கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கலாம். அவற்றுக்கு...
தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...
ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #11

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் அனுபவிக்கும் இன்பமாகும். இதை தான் நம் முன்னோர்கள் 'திணை விதைத்தவன் திணையை அறுவடை செய்வான்" என்று சொன்னார்கள். செய்த வினையை...
carrot halwa recipe

சுவையான கேரட் அல்வா எப்படி செய்வது

கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் சர்க்கரை பால் ஏலக்காய் முந்திரிப் பருப்பு 6.உலர்ந்த திராட்சை நெய் செய்முறை காரட்டை தோல் சீவி சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும். ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.