உணவு பொருட்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

உணவு பொருட்கள் கனவில் வந்தால்

மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

சாப்பிடுவது போல கனவு

1. பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்று அர்த்தம்.
2. விருந்தில் உணவு உண்பது போல் கனவு வந்தால் திருமண தடை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
3. காப்பி சாப்பிடுவது போலக் கனவு கண்டால் சுபச் செய்திகள் இல்லம் தேடி வரும் என்று அர்த்தம்.
4. இறைச்சி சாப்பிடுவது போல கனவு வந்தால் வியாதிகள் உண்டாகும் என்று அர்த்தம்.
5. மீன் இறந்து கிடப்பது போன்றோ, அல்லது கருவாடு கனவில் வந்தால் பகைவர்களின் தொல்லை ஏற்படும் என்று அர்த்தம்.
6. ஜாம் சாப்பிடுவது போலக் கனவு கண்டால் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெற போவதன் அறிகுறியாகும்.
7. சாதம் சாப்பிடுவது போல கனவு வந்தால் வியாதிகள் உண்டாகும் என்று பொருள்.
8. அரிசி கனவில் வந்தால், நாம் செய்யும் தொழில் மேன்மை அடையும், லாபம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
9. காரமான பொருட்களை சாப்பிடுவது போல கனவு வந்தால் உங்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் அல்லது சன்மானம் கிடைக்கும் என்று அர்த்தம்.
10. கோழி முட்டை கனவில் வந்தால் தொழில், வியாபாரம் சிறந்து விளங்க போவதன் அறிகுறியாகும்.

தேநீர் குடிப்பது போல கனவு கண்டால்11. டீ(தேநீர்) குடிப்பது போல கனவு கண்டால் பிரிந்து போன நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அர்த்தம்.
12. கோதுமை, அரிசி இவைகளை கனவில் கண்டால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று பொருள்.
13. முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை உண்டாகும் என்று அர்த்தம்.
14. சூடான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் மனதில் நினைத்து கொண்டிருக்கும் வெகு நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அர்த்தம்.
15. உப்பு கனவில் வந்தால் பணம், பொருள் நிறைய சேர போகிறது என்று பொருள்.
16. வெல்லம் தின்பது போல கனவு கண்டால் வீட்டில் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
17. புளிப்பான உணவுகளை சாப்பிடுவது போலக் கனவு கண்டால் நமக்கு ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் விலகும் என்று அர்த்தம்.
18. தயிர் சாப்பிடுவது போல கனவு வந்தால் வீட்டில் லக்ஷ்மி கடாஷம் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
19. பருப்பு கனவில் வந்தால் பகைவர்கள் விலகி ஓடுவார்கள் என்று பொருள்.
20. பட்டாணி கனவில் வந்தால் வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும் என்று அர்த்தம்.
21. ரொட்டி (பிரட்) சாப்பிடுவது போல கனவு வந்தால் வீட்டில் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
22. பாயசம் சாப்பிடுவது போல கனவு கண்டால் நன்மைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
23. பால் குடிப்பது போல கனவு கண்டால் செல்வம் சேரும் என்று அர்த்தம்.
24. இஞ்சி கனவில் வந்தால், நோய்களால் பாதிப்பு ஏற்பட போகிறது என்று பொருள்.

இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்
25. இனிப்புகள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்று அர்த்தம்.
26. ஏலக்காய் கனவில் வந்தால் பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவீர்கள் என்று அர்த்தம்.
27. ஏலக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால், மிகுந்த செல்வம் வரப்போவதன் அறிகுறியாகும்.
28. பசியால் வருந்துவது போலக் கனவு கண்டால் வறுமை ஏற்படலாம், செல்வங்கள் கூட கரையலாம் என்று அர்த்தம்.
29. தான் மட்டும் தனியாக சாப்பிடுவது போல் கனவு வந்தால் துன்பங்கள் ஏற்படும். உறவினர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படலாம்.
30. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விருந்தில் சாப்பிடுவது போலக் கனவு கண்டால், உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தண்ணீர்

ஸ்லிம்மான அழகிய உடல் அமைப்பை பெற சில எளிய டிப்ஸ்

அழகான உடல் அமைப்பை பெற எளிய டிப்ஸ்  உடல் எடை அதிகரிப்பால் இன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது மெலிந்த அழகான உடல் அமைப்பை தான். நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை...
தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
மாரடைபிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு...
செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...
மருதாணி இலை பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும்...
திதி என்றால் என்ன

திதிகள் என்றால் என்ன? அவை யாவை?

பஞ்சாங்கமும், திதிகளும் நமது தினசரி வாழ்க்கையில், ஒரு நாளை துவங்கும் போதே அந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எல்லா நாட்களும் அவ்வாறு இனிய நாளாக அமைவதில்லை. ஒவ்வொரு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.