இந்தப் பொருட்களை கை தவறி கீழே சிந்தி விட்டால் என்ன பலன் தெரியுமா?

இந்தப் பொருட்களை கை தவறி கீழே சிந்தி விட்டால் என்ன பலன் தெரியுமா?

நாம் சில நேரங்களில் கவனக்குறைவாக இருக்கும்போது பொருட்கள் கீழே சிந்துவது சகஜம்தான். இதைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால், அவ்வாறு சிந்தும் பொருட்களுக்குக் கூட பெரியவர்களால் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

அரிசிஅரிசி: 

அரிசி கைத்தவறி கீழே கொட்டி விட்டால், குடும்ப சச்சரவு, காரியத்தடை என்று அர்த்தம். நீங்கள் ஏதேனும் புதிதாக தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால் அதில் தடை ஏற்படும். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும் என்று அர்த்தம்.

குங்குமம், மஞ்சள் குங்குமம்: 

குங்குமம் கைத்தவறி கீழே சிந்தி விட்டால், அபசகுணம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே குங்குமம் கீழே கொட்டினால், வெற்றி மற்றும் அனுகூலம் பெறப் போகிறீர்கள் என்றே பொருள்.

மஞ்சள்:

மஞ்சள் கீழே கொட்டினால் மங்கலம், சிறப்பு என்று பொருள். ஏதேனும் தொழில் தொடங்கப்போகிறீர்கள் என்றால், அது சிறப்பாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

எண்ணெய்எண்ணெய்: 

எண்ணெய் கைத்தவறி கீழே கொட்டிவிட்டால், அவசெய்தி, இழப்பு என்று பொருள். நீங்கள் ஏதாவது தொழில் செய்பவராக இருந்தால், அதில் பொருள் நெருக்கடி, தடை, மற்றவர்கள் உங்களை குறை சொல்வது போன்ற விஷயங்கள் நடக்கும்.

பால் பால்: 

சில சமயம் பால் காய்ச்ச எடுக்கும்போது கைத்தவறி கீழே கொட்டிவிடும். இன்னும் சில நேரங்களில் பூனை பாலை தட்டிவிட்டு விடும். அதற்கான பொருள் கலகம், தோல்வி என்பதாகும்.

சர்க்கரைசர்க்கரை: 

சர்க்கரை கீழே சிந்துவதால் நல்ல பலனே சொல்லப்பட்டிருக்கிறது. சர்க்கரை தரையில் சிந்துவதால், புகழ் ஏற்படுவதோடு, நாம் செய்யும் தொழிலில் மேன்மை ஏற்படும் என்பதே பொருள்.

தேங்காய்தேங்காய்: 

தேங்காய் கைத்தவறி கீழே விழுவதால், நீங்கள் செய்யக்கூடிய செயலில் ஏற்படவிருக்கும் தடை அனைத்தும் நீங்கும், தொழில் செய்பவர்களுக்கு பண வரவு அதிகமாகும் எனப் பொருள்.

பூக்கள் பூக்கள்: 

பூக்கள் கைத்தவறி கீழே விழுந்தால் காரிய வெற்றி, பக்தி, நலம் என்று பொருள். அதாவது வாசனையுள்ள மலர்கள் கீழே கொட்டினால், செல்வம், சுகம் பெறுவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

உப்புஉப்பு: 

உப்பு கீழே சிந்தினால் நல்லதல்ல என்று பெரியவர்கள் சொல்வார்கள். உப்பு மகாலக்ஷ்மியின் அம்சமாக சொல்லப்படுகிறது. எனவே, உப்பு கீழே சிந்திவிட்டால், பண விரயம், பணத்தடை ஏற்படப் போவதாகப் பொருள்.

anmeegam

Prediction

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம், மிதுனம் மிருகசீரிஷம் 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம் மிருகசீரிஷம் 3, 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின்...
27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும் நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில்...
காபி குடிப்பது நல்லதா

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ?

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு சமயம் எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நாள் தங்களது ஆடுகள் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடனும், இரவில் தூங்காமல் விழித்திருந்ததையும் கவனித்தனர்....
கருவளையம் வர காரணம் என்ன

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும்,...
பூக்கள் கனவு பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகள் தூக்கத்தின் போது வருகின்றன. அதில் ஒருசில கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். அந்தவகையில் பலருக்கும் பூக்களை பற்றிய...
செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம் தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ பட்டை – 1 துண்டு புளி – சிறிதளவு தனியாத் தூள் – ½ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ½...
சோமவார விரதத்தின் மகத்த்துவம்

கார்த்திகை சோமவார தரிசனத்தின் பலன்கள்

கார்த்திகை சோமவார தரிசனத்தின் மகத்துவம்  சிவபெருமானை தினந்தோறும் வழிபடுவது சிறந்தது தான் என்றாலும், சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமை தினத்தன்று இறைவனை வணங்குவது பெரும் பாக்கியத்தை கொடுக்கும். தமிழில் திங்கட்கிழமை எனப்படுவதே, வடமொழியில் சோமவாரம் என்று...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.