21 தலைமுறை சாபங்களை போக்கும் ருத்ர கயா

21 தலைமுறை சாபங்களை போக்கும் ருத்ர கயா

 அமாவாசை தினத்தன்று முன்னோர் வழிபாடு செய்வதன் மூலமாக பித்ரு சாபம் எதுவும் இருந்தால் அவை நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இந்நிலையில், 21 தலைமுறையினரின் சாபங்களை போக்கும் ருத்ர கயா எங்கே இருக்கிறது என்றும், அதன் சிறப்பு, பலன்கள் குறித்தும் பார்க்கலாம்.

பித்ரு தோஷம் போக்கும் ருத்ர கயாருத்ர கயா எங்கே இருக்கிறது?

பீஹார் மாநிலத்தில் உள்ள கயாவில் விஷ்ணு பாதத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து வழிபடுவதால் முன்னோர்களுக்கு மோட்சத்தை கொடுக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

கயாவில் விஷ்ணு பாதம் இருப்பதுபோல், தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்ய சுவாமி கோயிலில் ருத்ர பாதம் உள்ளது.

இத்தலத்தின் வட ஆல விருட்சத்தின் அடியில் உள்ள ருத்ர பாதத்தில், பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து வழிபட முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதால் இத்தலம் ருத்ர கயா எனப்படுகிறது.

மோட்சம் தரும் ருத்ர கயாருத்ர கயாவின் சிறப்புகள்

விஷ்ணு கயாவில் வழிபட்டால் 7 தலைமுறையினர்களின் பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆனால், திருவெண்காட்டிலுள்ள ருத்ர கயாவை வழிபட்டால், விஷ்ணு கயாவை விட 3 மடங்கு 21 தலைமுறையினர்களின் பித்ரு சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

பித்ருக்களுக்கு தர்ப்பணம், பிண்டம் வைத்து வழிபட அமாவாசை தினம் சிறப்பானது என்றாலும், ருத்ர கயாவில் ஆண்டு முழுவதும் பிண்டம் வைத்து வழிபட சிறப்பானது என்று கூறப்படுகிறது.

சந்திர தீர்த்தம் அருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் உள்ள ருத்ர பாதம் என்ற இடத்தில் வரையப்பட்டுள்ள சிவபெருமானின் திருவடிகளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அதனால், நாடு முழுவதும் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர்.

காசிக்கு சமமான 6 ஸ்தலங்களில் திருவெண்காடு ஒன்றாகும். இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், ஸ்தல விருட்சம் என எல்லாமே மூன்று மூன்றாக உள்ளது.

நவக்கிரகங்களில் புதனுக்குரிய இந்த ஸ்தலத்தில், சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் ஒன்றான அகோர மூர்த்தியை திருவெண்காடு ஸ்தலத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாது.

சிதம்பரத்தை போன்றே நடராஜ சபையும், இரகசியமும் உள்ளது.

மேலும், பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பலன்கள்

வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு போன்றவைகள் கிடைத்திட பலரும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

இங்கு வந்து வழிபட பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி, திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Puzzles with Answers | Tamil Puthirgal | Brain games in Tamil | Brain Teasers...

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
குங்குமம், மஞ்சள்

இந்தப் பொருட்களை கை தவறி கீழே சிந்தி விட்டால் என்ன பலன் தெரியுமா?

இந்தப் பொருட்களை கை தவறி கீழே சிந்தி விட்டால் என்ன பலன் தெரியுமா? நாம் சில நேரங்களில் கவனக்குறைவாக இருக்கும்போது பொருட்கள் கீழே சிந்துவது சகஜம்தான். இதைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் நம்மில் பலருக்கும்...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், மற்றும் அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்களை செய்வார்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவராகவும், கணக்கில் ஆர்வம் மிக்கவராகவும்...
விருட்ச பொருத்தம் என்றால் என்ன?

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது....
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...
ராம நவமி விரதம் இருப்பது எப்படி

ஸ்ரீராமநவமி சிறப்புகளும் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளும்

ஸ்ரீராமநவமி சிறப்புகள் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி...
மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.