புரதச்சத்து நிறைந்த கம்பு அல்வா

கம்பு அல்வா

கம்பு ஒரு புரதச் சத்து நிறைந்த உணவாகும்.தினமும் இட்லி, தோசை சாப்பிடுவதை தவிர்த்து கம்மங்கூழ்,கம்பு அடை, கம்பு தோசை என கம்பை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சிறு குழந்தைகளுக்கு கம்பை இது போன்று அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

கம்பு அல்வா செய்முறைதேவையான பொருட்கள்

  •  கம்பு – 1 கப்
  • நெய் – தேவையான அளவு
  • நாட்டுச் சர்க்கரை – 1 கப்
  • உப்பு – சிறிதளவு
  • முந்திரி, திராட்சை – சிறிதளவு
  • ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை

  • முதலில் ஒரு கப் கம்பு தானியத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • சுத்தம் செய்த காம்பினை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஊற வைத்த காம்பினை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
  • அரைத்த விழுதுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வடிகட்டி வைத்துள்ள கம்பு பாலை சேர்த்துக் கொள்ளவும்.
  • இந்த பாலை முதலில் ஒரு அகலமான கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மிதமான தீயில் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.
  • நன்கு வெந்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.
  • கெட்டியான பதத்திற்கு வந்ததும் 1 கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். உப்பு சேர்ப்பதால் இனிப்பு சுவை சற்று கூடுதலாக தெரியும்.
  • வாசனைக்காக சிறதளவு  ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
  • ஏலக்காய் சேர்த்ததும் தேவையான அளவு நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை கிளறி விடவும்.
  • இறுதியாக சிறிதளவு முந்திரி திராட்சை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சத்தான கம்பு அல்வா ரெடி.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...
மனிதர்கள் பற்றிய கனவு

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த...
நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி

பித்தத்தை தணிக்கும் நெல்லிக்காய் துவையல்

நெல்லிக்காய் துவையல் தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் – தேவையான அளவு தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் – ¼...
நீண்ட அடர்த்தியான கூந்தலை பெற

கூந்தலை பராமரிக்க சின்ன சின்ன ஆலோசனைகள்

கூந்தல் பராமரிப்பு  பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல் தான். அதிலும் நீளமான கூந்தலை உடைய பெண்கள் பார்க்க மிகவும் அழகாகவும் இருப்பார்கள். நீண்ட கூந்தலை உடைய பெண்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக...
கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...
prawn recipe

இறால் ப்ரைட் ரைஸ்

இறால் ப்ரைட் ரைஸ் தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ வடித்த சாதம்  - 2 கப் ( பாஸ்மதி அரிசி ) வெங்காயம் – சிறிதளவு  ( மெல்லிதாக நறுக்கியது ) ...
கனவு பலன்கள் நாய்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் பூனை கனவில் வந்தால் 1. வீட்டு அடுபாங்கரையில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல என்று அர்த்தம். 2. பூனை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.