மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா

ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது, இது அனைத்து வகையான டிபன் மற்றும் சாப்பாடு வகைகளுக்கு ஏற்றது. மட்டன் குருமாவை எளிதாக எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.

மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி தேவையான பொருட்கள்

  1. ஆட்டுக் கறி – ½ கிலோ
  2. வெங்காயம் – 3
  3. தக்காளி – 3
  4. பச்சைமிளகாய் 2
  5. மல்லித்தழை – சிறிதளவு
  6. சீரகத்தூள் – 1 ஸ்பூன்
  7. தனியாத்தூள் – 2 ஸ்பூன்
  8. மஞ்சள்பொடி – ½ ஸ்பூன்
  9. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  12. எண்ணெய் – தேவையான அளவு
  13. பட்டை – 1
  14. ஏலம் – 2
  15. கிராம்பு – 2

அரைக்க

  1. தேங்காய்த் துருவல் – ½ கப்
  2. கசகசா – 2 ஸ்பூன்
  3. முந்திரி – 5

செய்முறை

  1. ஆட்டுகறியை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. குக்கரில் 5 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொட்டு தாளிக்கவும்.
  4. அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரும் வரை வதக்கவும்.
  5. இப்போது சுத்தம் செய்து வைக்கபட்டுள்ள ஆட்டு கறியை அதனுடன் சேர்த்து கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராகத்தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
  6. சேர்க்கபட்ட மசாலாக்களின் பச்சை வாசனை மறைந்தவுடன் அரைத்த தேங்காய் மற்றும் முந்திரி விழுதை சேர்த்துக் கிளறி தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.
  7. இப்போது குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கி சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் மணம் மற்றும் சுவை நிறைந்த மட்டன் குருமா ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
கார்த்திகை தீபம் விளகேற்றும் முறை

கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை மற்றும் பலன்கள்

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் நம் வீட்டில் தீபம்...

மீன ராசி பொது பலன்கள் – மீன ராசி குணங்கள்

மீன ராசியின் குணங்கள் மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கியுள்ளன. இது கால...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், மற்றும் அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்களை செய்வார்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவராகவும், கணக்கில் ஆர்வம் மிக்கவராகவும்...
கண் திருஷ்டி நீங்க

உங்கள் குழந்தைக்கு கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டியவை

உங்கள் குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க பொதுவாக குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட... கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு... 1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக...
ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
அவல் லட்டு செய்வது எப்படி

ஆரோக்கியமான அவல் லட்டு செய்வது எப்படி

அவல் லட்டு தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – 1 கப் முந்திரி, திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஏலக்காய் – சிறிதளவு ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.