பாம்பு புற்றுக்கு பால், முட்டை வைப்பது ஏன்?

பாம்பு புற்றுக்கு பால், முட்டை

கோவில்கள், வயல்வெளிகள் ஆகியவற்றில் பாம்பு புற்று இருப்பதை பார்த்திருப்போம். பாம்பு புற்றுக்கு பால் மற்றும் முட்டை வைத்திருப்பதையும் பார்த்திருப்போம். நம் முன்னோர்கள் பாம்பிற்குப் பால் மற்றும் முட்டை வைப்பார்கள். இது எதற்காக என பல பேருக்கு தெரியாது. ஒரு சிலர் பாம்பிற்கு முட்டையும் பாலும் மிகவும் பிடித்த உணவு அதனால் வைக்கிறார்கள் என கூறுவார்கள். ஆனால், உண்மை என்னவெனில் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கபட்டுள்ளது.

பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது சரியா

எதற்குப் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுகிறார்கள்?

பண்டைய காலங்களில் மனிதர்களின் வசிப்பிடங்கள் பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியும், காடுகளை ஒட்டியும் இருந்தன. மனிதர்கள் உணவு தேவைக்காகவும், இன்ன பிற தேவைகளுக்கும் காடுகளை சார்ந்தே இருந்தார்கள். அப்போது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக வனவிலங்குகளும், விஷபூச்சிகளும், பாம்புகளும் இருந்தன. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் மனித நடமாட்டம் என்பது மிகவும். அப்போது மனிதனை விடப் பாம்புகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம். ஏனெனில் பாம்புகளின் இனபெருக்க விகிதம் அதிகம்.

அப்போது ஒரு உயிரை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அக்காலங்களில் மக்கள் இயற்கை, விலங்குகள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அவர்கள் பாம்புகளை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்தனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் செய்வது மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகரும் ஆண் பாம்பு பெண் பாம்பைத் இனப்பெருக்கத்துக்காக தேடி வரும். இவ்வாறு பாம்புகளின் இனபெருக்கம் நடக்கிறது.

பெண் பாம்பில் இருந்து வெளிவரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால், முட்டையிலிருந்து வெளிவரும் ஒருவித வாசனை தடுக்கிறது. ஆகவே பாம்புகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இப்படியாக பாம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தினார்கள்.

இதையே நாம் இன்றும் பின்பற்றி வருகிறோம். இதன் உண்மையான காரணத்தை சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனால்தான் ஆன்மீக ரீதியாக இப்படியொரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வில்வ இலை பயன்கள்

வில்வம் மருத்துவ குணங்கள்

வில்வம் வில்வம் இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இம்மரம் 15 அடி முதல் 25 அடி...
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கேட்டை நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி : புதன் கேட்டை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் கேட்டை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை :- இந்திரன் கேட்டை நட்சத்திரத்தின் பரிகார...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் – 4 கால்கள் கத்திரிக்காய் - 4 புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் ...
பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கிருத்திகை நட்சத்திரம் நட்சத்திரத்தின் இராசி: மேஷம் 1ம் பாதம், ரிஷபம் 2, 3 மற்றும் 4 ம் பாதம். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன். கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கான...
யோகங்கள் என்றால் என்ன

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #4

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் உண்டாகும் யோகங்களை குறிப்பதாகும். அவ்வாறான சில கிரக இணைப்புகள் நல்ல பலன்களையும், சில தீய பலன்களையும் தரலாம்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.