ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா செய்வது எப்படி

சிக்கன் சால்னா செய்வது எப்படி

ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்பதை பின் வருமாறு காணலாம். வீட்டிலேயே எப்படி செய்வது

ருசியான சிக்கன் சால்னா தேவையான பொருட்கள்

  1. கோழிக்கறி – ½ கிலோ
  2. பெரிய வெங்காயம் – 2
  3. தக்காளி – 2
  4. பிரியாணி இலை – 1
  5. பட்டை – 2 துண்டு
  6. கிராம்பு – 2
  7. ஏலக்காய் – 2
  8. சீரகம் – ¼ ஸ்பூன்
  9. சோம்பு –  ¼ ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  11. மல்லித்தூள் – 2 ஸ்பூன்
  12. மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்
  13. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  14. உப்பு – தேவையான அளவு
  15. எண்ணெய் – தேவையான அளவு
  16. கறிவேப்பிலை – சிறிதளவு
  17. கொத்தமல்லி – 1 கைப்பிடி

அரைக்க

  1. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  2. மிளகு – 2 ஸ்பூன்
  3. சீரகம் – 1 ஸ்பூன்
  4. மல்லி – 1/4 கப்
  5. காய்ந்த மிளகாய் – 2
  6. தேங்காய் துருவல் – ¼ கப்

செய்முறை

  1. இஞ்சி பூண்டு விழுது, மிளகு, சீரகம், மல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. சிக்கனை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  4. அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  5. பின்பு அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. இதனுடன் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு நன்கு வதக்கவும்.
  7. பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  8. சிக்கனை சேர்த்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது தண்ணியாக இருக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் சால்னா ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆரத்தி எடுக்கபடுவது ஏன்

திருமணத்தில் ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்? திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களை அரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கும் நடைமுறை காலம் காலமாக நமது வழக்கத்தில் உள்ளது. ஏன் ஆரத்தி எடுக்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. பலரும்...
12 ராசிகள்

உங்கள் ராசிக்கு என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்

  உங்கள் ராசிக்கு  என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்     மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த இராசியில் சத்திரிய கிரகமான சூரியன் உச்சம் அடைகிறார். இவர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால்,...
வயிறு மச்ச பலன் பெண்கள்

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள்

ஆண் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள் ஆண் மற்றும் பெண்ணின் கழுத்தின் முன் பக்கம், பின் பக்கம் போன்ற இடங்களில் இருக்கும் மச்சம் நீண்ட ஆயுளைத் தரும். இவர்கள் மந்தமான போக்கு கொண்டவர்களாக...
பெண் தலை மச்ச பலன்கள்

பெண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் தலை மற்றும் புருவ மச்ச பலன்கள் பெண்ணின் தலையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பேராசை, மற்றும் பொறாமை குணம் இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது. பெண்ணின் புருவங்களில் மச்சம் இருந்தால் அவர்கள்...
வேதை பொருத்தம் என்றால் என்ன

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? வேதை என்கிற சொல்லுக்கு ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று அர்த்தம். வேதைப் பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டும் வேதையாக...

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த...
கம்பு குழி பணியாரம் செய்முறை

இனிப்பு கம்பு குழி பணியாரம்

இனிப்பு கம்பு குழி பணியாரம் செய்வது எப்படி  கம்பு சத்து மிகுந்ததும், ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தானியமாகும்.  கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.