தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்

தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம். அதிரசம் செய்வதற்கு முக்கியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது பாகுபதம் சரியாக இருக்கிறதா என்பது தான். அது தேர்ந்து விட்டால் அதிரசம் செய்வது மிகவும் சுலபம்.                          சுலபமாக வீட்டிலேயே அதிரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

அதிரசம் செய்முறை

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் – 2
நல்லெண்ணெய் – சிறிதளவு

செய்முறை

  1. அதிரசம் செய்ய முதலில் ஒரு கப் பச்சரிசியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த பச்சரிசியை நன்கு கழுவி 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. 3 மணி நேரம் அரிசி நன்கு ஊறிய பிறகு அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் பொட்டு காய வைக்கவும்.
  4. அரிசி முழுவதுமாக காயாமல் சற்று ஈரப்பதத்துடன் இருக்கும் போதே எடுத்து ஒரு மிக்சியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
  5. பின்னர் வெல்லப்பாகு தயார் செய்ய  3/4 கப் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்குகாய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
  6. அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் கொஞ்சம்  ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளவும்.
  7. பச்சரிசி மாவில் தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகினை சேர்க்கவும்.
  8. வெல்லப்பாகு சூடாக இருக்கும்போதே மாவில் சேர்க்க வேண்டும்.
  9. வெல்லபாகு சேர்த்த பின் நன்கு கட்டிகள் இல்லதவாறு கலந்து கொள்ளவும்.
  10. தொடர்ந்து மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் அப்படியே மூடி வைக்கவும்.
  11. மூன்று நாட்களுக்கு பிறகு அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும்.
  12. அதிரச மாவை வட்டமாக தட்டி எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுக்கவும்.
  13. அதிரசத்தை எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கும் போது, அடுப்பபை மிதமான சூட்டில் வைக்கவும். அப்போதுதான் அவை நன்கு வெந்து இருக்கும்.
  14. அதிரசத்தை எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதன் மேல் ஒரு கரண்டியை வைத்து அழுத்தி எண்ணெய்யை வடித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
திருமண சடங்குகள்

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக?

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு திருமணத்திலும் அவரவர் குடும்ப வழக்கதிற்கு ஏற்ப சடங்குகள் வேறுபடும். குறிப்பாக இந்து மத திருமணத்தில் பல வகையான...
சாக்லெட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சாக்லெட் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ?

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ? குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து...
அப்பம் செய்யும் முறை

இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை...
உளுந்தங்களி

உடலை உறுதியாக்கும் உளுந்தங்களி

உளுந்தங்களி உளுந்தங்களி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து அதிகம் உள்ள ஒரு சத்தான உணவாகும். இதில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கொழுப்பு, வைட்டமின் B போன்ற சத்துக்கள்...
பதினெட்டு படிகளின் சிறப்புகள்

பதினெட்டு படிகளின் தத்துவம்

பதினெட்டு படிகளின் தத்துவம் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு தனிப்பட்ட சிறப்பு உண்டு. அந்த வகையில், பதினெட்டு என்ற எண்ணிற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உள்ளன. பாரதப் போர் நடைபெற்றது 18 நாட்கள். இராமயணப் போர் நடைபெற்றது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.