அவல் பாயாசம் செய்வது எப்படி ?

அவல் பாயாசம்

how to make aval payasam in tamil  தேவையான பொருட்கள்

  1. அவல் – 1 கப்
  2. வெல்லம் – ½ கப்
  3. பால் – 2 கப்
  4. ஏலக்காய் தூள்  – சிறிதளவு
  5. முந்திரிப்பருப்பு – தேவையான அளவு
  6. நெய் – தேவையான அளவு
  7. உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

  1. அவல் பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு  நெய் ஊற்றிக் கொள்ளவும்.
  2. நெய் சூடானதும் அதில் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. அதே வாணலியில் சுத்தமான அவல் 1 கப் சேர்த்துக் கொள்ளவும்.
  4. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அவலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. வறுத்த அவலுடன் 2 கப் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்க்கவும்.
  6. மிதமான தீயில் வைத்து அவலை பாலில் வேக வைக்கவும்.
  7. மற்றொரு வாணலியில் ½ கப் வெல்லத்தை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  8. அவல் பாலுடன் சேர்ந்து நன்கு வெந்தவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலை சேர்த்து கலந்து விடவும்.
  9. வெல்லம் சேர்த்து 1 நிமிடம் மட்டும் கொதித்தால் போதுமானது.
  10. பின்னர் அதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரிபருப்பை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான அவல் பாயாசம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திருமணத்தில் மாலை மாற்றுதல்

திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல் ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று...
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம் வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான...
அஷ்டமி நவமி திதிகள்

அஷ்டமி, நவமி திதிகள் ஏன் மக்களால் புறகணிக்கப்டுகின்றன

அஷ்டமி, நவமி திதிகள் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது...

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் – 4 கால்கள் கத்திரிக்காய் - 4 புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் ...
மோதிரம் எந்த விரலில் அணியலாம்

சாஸ்திரப்படி எந்தெந்த விரல்களில் மோதிரம் அணியலாம்?

சாஸ்திரப்படி எந்தெந்த விரல்களில் மோதிரம் அணியலாம்? பொதுவாக மோதிரம் அணிந்து கொள்ளும் பழக்கம் நம் அனைவரிடமும் உள்ளது. இது பழங்காலம் முதலே நடைமுறையில் இருக்கும் வழக்கங்களில் ஒன்றாககம். அதிலும் தங்க மோதிரம் என்பது நம்முடைய...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.