நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

“நவராத்திரி” என்றால் “ஒன்பது இரவுகள்” என்று பொருள். நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும்.

மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழித்து உலகிற்கு நன்மை செய்யும் விதமாக துர்காதேவி செய்த போரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இந்த நவராத்திரி விழாவாகும்.

புரட்டாசி மாதத்தில் மஹாளய அமாவாசையைத் தொடர்ந்து வரும் இந்த ஒன்பது நாட்களும் பெண் தெய்வங்களை போற்றி வழிபட்டு அவர்களை போல் பெண்களாகிய நாமும் தைரியத்துடனும், வீரத்துடனும் செயல்பட்டு நாம் தினசரி வாழ்வில் சந்திக்க கூடிய மகிஷாசுரன் போன்ற அசுரர்களை கண்டு பயப்படாமல் அவர்களை எதிர்த்து வென்று ஜெய்க்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.

நவராத்திரி முதல் நாள் இந்த வருடம் நவராத்திரி செப் 22-ந்தேதியான இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அக்.2-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக நவராத்திரி என்பது சரஸ்வதி பூஜை வரையிலான ஒன்பது நாட்களும், விஜயதசமி பத்தாவது நாளிலும் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் மிக அபூர்வமாக நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்படும். அப்படி இந்த ஆண்டும் அபூர்வமாக நவராத்திரி விழா மொத்தம் 11 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.

புரட்டாசியின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து, ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவடையும் இந்த நவராத்திரியை தான், வீட்டில் கொலு வைத்து விசேஷமாகக் கொண்டாடுகிறோம்.

நவரத்திரி அம்பிகை வழிபாடு நவராத்திரி பூஜை

நவராத்த்திரி பூஜை செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 06.15 மணி முதல் 7.15 மணி வரையிலான நேரத்திற்குள் நைவேத்தியம் படைத்து, நவராத்திரி பூஜையை துவங்கி விட வேண்டும். அதேபோல் மாலை 4.45 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து பூஜை செய்ய வேண்டும்.

வழிபட வேண்டிய அம்பாள் : ஷைலபுத்ரி . ஷைலபுத்ரி துர்க்கை அம்மனின் முதல் வடிவம். மலை அரசனான இமவான் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.

கோலம்: அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் இட வேண்டும்,

மலர்கள்: மல்லிகை

நெய் வேத்தியம்: வெண்பொங்கல் அல்லது சுண்டல் படைத்து வழிபட வேண்டும்.

பாட வேண்டிய ராகம் : தோடி

பூஜை நேரம்: காலை, 6.15 – 7.15 மணி வரை; மாலை 4:45 – 5:45 மணி வரை.

முதல் நாளில் அம்பாளுக்கு ஆரஞ்சு நிற வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...
கண்களை குளிர்ச்சியாக்கும் வெள்ளரிக்காய்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதால், அடிக்கடி கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக, சிறு வயது முதலே...
உடலை வலுப்படுத்தும் உணவுகள்

உடலை வலுப்படுத்தும் உணவுகள்

உடலை வலுப்படுத்தும் உணவுகள் என்னென்ன? உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள சத்தான உணவுகளை நாம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்தால் தான் நம் தோற்றம் அழகாகவும் உடல் உறுதியாகவும் ,...
ராசிக்கல் பலன்கள்

இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால்...
தவளை கனவு பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
விஜயதசமி சிறப்புகள்

விஜயதசமி வழிபாட்டின் பலன்கள் மற்றும் பயன்கள்

விஜயதசமி வழிபாடு அகில உலகத்தையும் காக்கக்கூடிய அம்பிகையானவள்  சக்தி, லக்ஷ்மி, சரஸ்வதி என மூன்று தேவிகளின்  சொருபமாக அவதரித்து மகிஷாசுரன் என்ற அரக்கனிடம் 9 நாட்கள் போர் புரிந்து பின் 10 வது நாளில்...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.